Monday, October 5, 2015

Black Money Solution

As we all have been enjoying black money and know that is polluting India's Development, I have few solutions..
few workable solutions.

In case, if someone from Ruing Indian Government party, needs a free advice, I insist to consider my recommendations.

Option A: Polymer Currency
1. Find a non duplicate Polymer or better plastic currency technology and print with brand new serials, holographic and barcode
2. Declare that all existing currencies are void.
3. If they want a new currency, they have to deposit all their old currency and get brand new Polymer Currency.

this is a very simple and workable approach, by which India could resolve 90 % of black money issues.

Option B: 100 > Electronic Transactions

Eliminate all denominations of currency anything after Rs.50.
only allow coins, 5, 10, 20 and Rs.50 Currency.

Any transaction which is greater than Rs.100 should be Electronic. let them swipe their debit credit cards as many times as they want. 

also please relax the number of usage limits.

So Dear government your mission is to choose accept any one of the above impossible options and dissolve corruption forces from India.

Jaihindh.


Monday, August 25, 2014

இஸ்லாமும் ஈஸ்வரனும்...

ஜிப்ரேல் என்ற இறை தூதர் (நபி), அண்ணல் முகம்மது அவர்களுக்கு கூறிய வேதமே குர்ரான். இறைவன் ஒருவனே என்ற தத்துவம், எளிமையான வாழ்க்கை முறை, நோன்பு, மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுதல் மற்றும் தினசரி கட்டாயத் தொழுகை.. ஜிப்ரேல் ஒரு நாளுக்கு 52 முறை தொழ சொன்னாராம், ஆனால் நடைமுறை சாத்தியம் கருதி, முகம்மது 5 முறையாகக் குறைத்ததாக ஒரு வரலாறு உள்ளது., [மேலும் விபரங்களுக்கு நிலமெல்லாம் ரத்தம் என்னும் நூலை படிக்கவும்]

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்தவன் ஈஸ்வரன். தவ யோகத்தை வழிகாட்டுகிறது சைவம். உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் ஈஸ்வர். ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாத இறைவன் ஈஸ்வரன்.

நீள அகல உயரம், ஆரம்பம் மற்றும் முடிவு நிலை இல்லாத ஒரே ஒரு உதாரணம் இந்த பிரபஞ்சமே... விண்வெளி, பால்வெளி...காலக்ஸி .. என்று வல்லுனர்களால் பல்வேறு வார்த்தைகளில் விளக்கப் பட்டு வந்த இந்த பிரபஞ்சமே இறைவன் என்ற தத்துவம் சைவத்தில் உள்ளது.

எந்த ஒரு மதமும் உருவான காலத்தில் மிக சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது, ஆனால் காலப் போக்கில் மத குருக்கள், மற்றும் மத அரசியல்வாதிகள் அவர்களின் வசதிக்கேற்ப ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆதலால், மதத்தின் போக்கு மாறி இருக்கிறது.

மதம் என்பது மக்களின் அபின் - என்று ஒரு மார்க்சீய வாக்கியம் உள்ளது. இதை மறுக்க என்னால் இயலவில்லை.

இன்று இருக்கும் சூழலில் மதமே இல்லாமல் இருப்பது உத்தமம் என்றே தோன்றுகிறது. [நம் ஆதி தமிழர்கள் போல].


அமேஸான் காடுகளில் இருந்து...

இயற்கை நமக்கு பல அரிய மூலிகைகளைக் கொடுத்து இருக்கிறது.. ஆனால் அவை யாவும் பொய் என்று போலி சித்த மருத்துவர்கள் நிராகரிக்க வைத்து விட்டார்கள்.

உடலில் ஜீரன மண்டலத்தில் இருந்துதான் எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பிகின்றன..

பெரும்பான்மையான நோய்களுக்கு முறையான மருத்துவம் சித்த மருத்துவ மூலிகைகளில் இருக்கிறது, அவை உடலுக்கு பக்க உபாதைகள் ஏதும் கொடுக்காது.,

ஆனால் நவீன / ஆங்கில மருத்துவ முறை இதனைக் குப்பை என்று நிராகரிக்கிறது. சித்த மருத்துவ மூலிகைகளை அங்கீகரித்தால், கொள்ளை விலையில் விற்கும் ரசாயன மருந்துகளின் விற்பனை படுத்துவிடும் என்ற ஒரே காரணம்தான்.

இன்று அரைகுறை ஆடையில் ஒரு பெண் வலம் வந்து, அவளைவிட கவர்சிகரமான வார்த்தைகளில், என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

அமேஸான் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சில அறிய வகை மூலிகைகளால் ஆன தைலத்தை விரும்புகிறோம், [மேலும் விபரங்களுக்கு மிடாஸ் டச் - எம்.எல்.எம் காட்சிகளை சதுரங்க வேட்டை எனும் படத்தில் பார்க்க] ஆனால், நமது பாரம்பரிய மூலிகைத் தைலங்களை வசதியாக மறந்து விட்டோம்.

ஆங்கில / ரசாயன மருந்துகளில் போலிகளைப் பிரித்தறிவது கடினம், ஏனெனில் அவை உடலில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் சித்த மருந்துகளில் நீங்கள் பரிச்சயம் அடைய ஒரு சில முயற்சிகள் தேவை. பின் போலிகளை எளிதில் கண்டு கொள்ளலாம்.

சித்த மருந்துகளால், உடனடி நிவாரணம் கிடைக்காது, ஆனால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

வளம் பெறுவோம்., வாழ்க வளமுடன்.




Friday, August 22, 2014

மரம் நடுவோம்..


இயற்கை நியதிப்படி ஒன்றை சார்ந்தே ஒன்று உயிர் வாழ்கிறது, இயற்கையின் விதிப்படி, உலகம் முழுவதும் வெறும் காடுகளாகவும் மரம் செடி கொடி புதர்களாகவும், பாலைகளாகவும், சோலைகளாகவும், கடலாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனும் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.
அவனுக்கு வேண்டியது எல்லாம் உணவு மட்டுமே., மரங்களில் இருந்து பழங்களையும் கீரை கிழங்குகளையும் தேவைப் பட்டால் ஒரு சில சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்ந்தான்.

மாற்றம் ஒன்று மட்டுமே நிலையான இயற்கை நியதிக்கு மனிதனும் விதி விலக்கல்ல., விங்குகளின் தோலை உன்ன முடியாது, ஆகையால் அதை வைத்து சுகாதாரத்திற்காக குறிகளை மறைக்கப் பழகினான். இது வாய் மூலமே குடிக்க உண்ண முடியும் என்று தோன்றிய அனிச்சை செயல்.

சிக்கி முக்கி கற்களின் மூலம் நெருப்பைக் கண்டு பிடித்தான், பின்னர் அதை வைத்து குளிர் காய்ந்தான்., இவை எல்லாம் இயற்கையே மனிதனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

நெருப்பின் பின் சக்கரம், வண்டி, வண்டியை இழுக்க மற்ற ஆநிரைகளை அடிமைப் படுத்தினான்.. இங்குதான் மனிதனின் முதல் தவறு ஆரம்பிக்கிறது.

அடிமைத் தனம் என்ற ஒன்றை மனித விலங்கு மற்ற விலங்குகளிடம் செலுத்த ஆரம்பித்தது... அன்று தொட்டு, இயற்கையின் போக்கு இந்த மனித விலங்குகளினால் பெரிதும் பாதிக்கப் பட்டு, மொழி, மதம் இனம் வன்மம், நாகரீகம் நகரமயம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், அடிமைத் தனம், தீவிரவாதம்... என்று மனித சமுதாயம் அடைந்த பாதிப்புகளை விட இயற்கை சீரழிந்துள்ளது.

ஒட்டு மொத்த இயற்கையையும் துவம்சம் செய்து மனித விலங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக போகங்கள் கூடிய விரைவில் முடியப் போகின்றன.

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே மாசுபடுதுகிறோம்.

இயற்கை தன்னை உருமாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது...
வறண்ட ஏரிகளில் மீண்டும் தண்ணீர் சுரக்க ஒரு சில தலைமுறைகள் ஆகலாம், ஆனாலும் ஏரி என்பது ஏரி தான். அதில் மண் கொட்டி மாடி வீடு கட்டுவது மனிதனின் முட்டாள்தனம்.

கடைசி சொட்டு தண்ணீரும் நச்சுண்டு, அமெரிக்காவின் ஆயுத பலமும், அரேபியாவின் எண்ணெய்  வளமும், ஆசியாவின் தங்க வளமும் ஒரு சொட்டு மழை நீருக்காக ஏங்கும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...

இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இயற்கையை பேண நம்மால் முடிந்த ஒரு சில காரியங்களைச் செய்வோம்.


மரம் நடுவோம், மழை நீர் சேமிப்போம்...
வேதாத்திரி மகரிஷி பாணியில்,

எரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிய,
மக்கள் வளமாய் வாழ்க.

ஜென்ம ஆசை...

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்...


என் வாழ்நாளில் ஒரு முறையேனும் இப்படி, தமிழரின் பாரம்பரிய உணவை ருசிக்க ஆசைப் படுகிறேன். இது அந்தக் காலத்து ஏழை வீட்டு உணவு... மிக்க ஆரோக்கியம் நிறைந்தது.



Monday, August 18, 2014

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

மாட்டுக்கறியும் கொலை வெறியும் - என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்.

நான் யார் சொல்வதையும் விளக்கவில்லை... என்னில் எழும் ஒரு கேள்வி...
எந்த ஒரு பாலூட்டியும் இன்னொரு பாலூட்டியின் குட்டிக்கு பால் கொடுக்காது.,
உதாரணம்., ஒரு மனிதப் பெண் இன்னொரு மனிதப் பெண்ணின் குழந்தைக்குப் பால் கொடுக்க முகம் சுழிப்பாள்.,

பசுவே உங்கள் இல்லம் வந்து, இந்தா குடி என்று பால் கொடுப்பதில்லை.... பால் நிறைய சுரக்கிறது என்று பசுவிடம் இருந்து மனிதன் பாலைத் திருடுகிறான்.  ஏன் பன்றியிடம் இருந்து பால் திருடவில்லை என்றால், பசுவின் பால் உடலுக்கு சத்து, மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது...

பசுவிற்கு செயற்கையாக சினையேற்றுகிறான், தீவனமிட்டு ஒன்றுக்கு பல மடங்காக பால் கறக்கிறான், கொள்ளை லாபம் பார்கிறான், மடி வற்றிய பின் கறிக்காக விற்று விடுகிறான்...

பசுவின் கன்றுக்காக சுரந்த பாலைத் திருடி விட்டு, நன்றி உணர்ச்சியே இல்லாமல் பசுவைக் கொல்வது நியாமா?

Tuesday, August 5, 2014

"ஜிகிர்-தண்டா" திரை விமர்சனம்


தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், மிகவும் தேர்ந்தெடுத்து படங்களைப் பார்ப்பது என் நிலைப்பாடு.
படத்தின் 30 % காட்சிகள் நகைச்சுவை மிகுந்தது...
முதல் பாகம் சற்றே இழுவை...
இரண்டாவது பாகம் மிதமான வேகம்... அவ்வளவே..

தமிழ்பட வெறியர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி.,
என்னை பொறுத்த மட்டில், இது ஓகே வொர்த் வாட்சிங் படம்.. அவ்வளவுதான். அடுத்த சீன் என்ன என்று என்னால் எளிதாகக் கணிக்க முடிந்தது...

ஆனால், RED (English Movie) படத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு விறுவிறுப்பான அனுபவம், அந்தக் கதா நாயகியின் முகபாவத்தில் ஈர்ப்பு, இந்தப் படத்தில் ஏற்படவில்லை.
லட்சுமி மேனனுக்கு செயற்கையாக ஒரு பாத்திரம்... தேவையே இல்லை, செலவைக் குறைத்து இருக்கலாம்.